பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்க்கு 2016-2017ம் ஆண்டில் உலக மகளிர் தின விழாவில் "அவ்வையார் விருது" முதலமைச்சர் தலைமையில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதிற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் பெண்மணிகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுதல் வேண்டும்.
மேலும், விண்ணபிக்க விரும்புவோர் மேட்டுப்பாளையம் சாலை பூமார்கெட் அருகில் கென்வின் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள 'மாவட்ட சமூகநல அலுவலகத்தை' தொடர்புக் கொண்டு உரிய சான்றுகளுடன் 17-1-2017க்குள் சமர்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
மேலும், விண்ணபிக்க விரும்புவோர் மேட்டுப்பாளையம் சாலை பூமார்கெட் அருகில் கென்வின் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள 'மாவட்ட சமூகநல அலுவலகத்தை' தொடர்புக் கொண்டு உரிய சான்றுகளுடன் 17-1-2017க்குள் சமர்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.